வெள்ளி, 30 மே, 2014

பன்னாட்டு அலுவல் கலை இதுவோ..?

நடுநிசி நாய்களும் 
நன்றியுணர்ந்து அசந்திருக்கும் வேளை
காளைகளும் கன்னிகளும் 
களித்திருக்கும் நட்சத்திர விடுதியில் 
குடி ஆனவர்கள் மட்டுமே 
அனுமதிக்கப்படும் ஓர் அறை
உயர் அழுத்த சத்தத்தில் 
சிதைந்து கொண்டிருக்கும் 
செவிகளுக்கு மத்தியில் 
சிதைந்து போகும் 
சிலையிலிருந்து விழும் 
மக்கிப்போன மண் போல 
சிக்கனமாய் 
உடையை உதிர்த்துக் கொண்டே 
மையத்தை அடைந்தவளின் 
பின்னல் அவிழ்ந்த தலைமுடியில் 
எஞ்சியிருக்கும் பெண்மையும் 
கரைந்து கொண்டிருந்தது 
மது தந்த மயக்கத்தில் 
கிறங்கித் தவிக்கும் விழி கொண்டவளின் 
இடை மறித்து 
இதழ் சுவைத்தான்
களிப்பிலிருந்த கள்வன் ஒருத்தன்..

தொட்டவனை 
தொடுக்கும் அம்புப் பார்வை வீசும் 
புதுமைப் பெண்ணொருத்தி 
இருந்திருக்கவில்லை யெனும் 
ஆதங்கத் தோடு 
மனம்
ஊனமாக நின்றிருந்தேன்....

கருத்துகள் இல்லை: