செவ்வாய், 9 செப்டம்பர், 2014

என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

என்ன செய்ய முடியும்..... இந்த நினைவுகளை..

பெயருக்குப் பின்
எழுத்தாகவோ எண்ணாகவோ
உருமாற்றிக் கொள்ள முடியும்..

நாட்குறிப்பில் எழுதி
பின்
அடையாளத்தோடு கிழித்தெறிய முடியும்..

கண் துஞ்சும் நேரம்
கனவுகள் செய்ய முடியும்..

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிக்கு
கடவுச் சொல்லாக்கி மறக்க முடியும்..

புனைக்கதைகளில் மாந்தராக்கி
நடமாட விட முடியும்..

கவிதையின் மென் வார்த்தைகளில்
நுழைத்திட முடியும்..

மதுப்புட்டியில் போடப்படும்
பனிக்கட்டியில்
உருக்கிவிட முடியும்...

காலையில் கண்புரை
கழுவும்  நீரில்
கரைத்து விட முடியும்...

கசங்கிய காகிதத்தில் நிரப்பி
குப்பையிலும் எரிந்துவிட முடியும்...

3 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


நினைவுகள் தொடர்கதைதான் நண்பரே....மரணம் வரை.

மகேந்திரன் சொன்னது…

அருமையான கவிதை நண்பரே...
வாழ்த்துக்கள்...