செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கனவுராட்டினம் - படைப்பாளிக்கொரு கடிதம்

வணக்கம் மாதவன்,

எனக்கு கனவுகளை பிடிக்கும் அதைக்கண்ட அன்றைய பொழுது எப்படி குதூகலமாக இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன் கனவுராட்டினம் வாசிக்கும் போதும். புதினம் தொடங்கியதும் எடுக்கும் வேகம் அது முடியும் வரை குறையவேயில்லாமல் ஊடாடுகிறது, வழுக்கிக்கொண்டோடுகிறது.
ஒரு புதினம் வாசிப்பவனின் உள்ளத்தையும் எண்ணத்தையும் என்ன செய்யவேண்டுமோ அதைத் தாராளமாக செய்கிறது.

இறுதியில் சுந்தர் என்பவன் அவனே அல்ல வேறொருவன் என நம்பவைக்கப்படும் பொழுதில் வாசிப்பின் இடையே புனைவை அசைபோட்டபோது தோன்றிய இரண்டு வரிகளை மீண்டும் ஒருமுறை உச்சரித்தேன். 

"இந்த இருக்கையில் நான் இல்லை எனது கனவு இருக்கிறது அதேயிருக்கையில் எதிரில் அவர் எனும் அவரது கனவு இங்கு இருக்கை என்பது யாருடைய கனவு."

வாழ்த்துகள் மாதவன் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் "2o11" என அச்சாகியிருக்கிறது அது "2011" ஆக இருக்குமோ என்ற கற்பனையில் இரண்டுக்கும் அனுப்பியிருக்கிறேன் அது உங்களைச்சேருமா இல்லை நீங்களே ஒரு கற்பனை உருவமா என எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்..... 
ஜெ.பாண்டியன்
PANDIANINPAKKANGAL.BLOGSPOT.COM

இதை பதிவிடும் பொழுதில் "2011" என முடியும் மின்னஞ்சல் தவறு என பதில் வந்துவிட்டது.

கருத்துகள் இல்லை: