சனி, 9 மே, 2020

நினைவுகளின் சுவட்டில்

அங்கங்கே வெங்கட் சாமிநாதன் அவர்களின் சில கட்டுரைகளையும், கலைவெளிப் பயணங்கள் எனும் கட்டுரைத் தொகுப்பை மட்டுமே வாசித்திருந்தாலும், அதிலிருந்த கருது பொருள் மற்றும் மாற்றுச் சிந்தனை  வியப்பிலாழ்த்தியது உண்மை. 

இந்த தன் வரலாற்று நூலை வாசிக்க இருமுறை கையிலெடுத்து ஒருவரி கூட வாசிக்காமல் அலமாரியில் வைத்துவிட்டு, சென்ற வாரம் மீண்டும் எடுத்தேன் சிற்பி தனபால் அவர்களின் தன்வரலாறு வாசிப்பிற்கு பிறகு, அதற்கும் இதற்கும் கலை சார்பு இருக்குமென்ற கருதுதலே இப்போது வாசிக்கத் தொடங்கியதன் காரணமென எண்ணத் தோன்றுகிறது.

முன்னும் பின்னுமாக காட்சி சித்தரிப்புகளைக் கொண்ட அவரின் வாழ்வு நாவலுக்குரிய தன்மையில் இருந்ததாகப்பட்டது, அதனாலோ என்னவோ தொடர்ந்து வாசிக்க அதன் போக்கில் உள்ளிழுத்துக் கொண்டது. சுதந்திரத்துக்கு முன் மற்றும் பின்னான காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளோடு ஊடோடி வாழ்ந்த இவ்வாளுமையின் ஓட்டம் சுவாரசியமும் வலியும் மிக்கதாகவுள்ளது. ஒரு காலகட்டத்தின் பயணங்கள் எத்தகையதாக இருந்தது என்பதை வாசிக்கையில் அக்காலத்திற்கான ஆவணமாகவும் இப்படைப்பை கொண்டாட முடியும்.

1 கருத்து:

Kasthuri Rengan சொன்னது…

நினைவுகள் தொடரட்டும்