6:30
மணியை கடந்தும் சூரியன் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது, நான் அருகம்புல்லுக்காக கண்களை
சாலையோரம் அலையவிட்டு விட்டு நகர்ந்து கொண்டிருந்தேன். மனித விலங்கு நிலத்தை வேட்டையாடியதில்
அருகம்புல்லும் அரிதாகிப் போனது கண்களுக்கு, ஆனாலும் சிறு நம்பிக்கை இருந்தது கிடைத்துவிடுமென்று.
வீல்…வீல்..
என்ற பன்றிகளின் சத்தம், அத்தனையும் குட்டிப் பன்றிகள். நான்கு நாய்கள் சாலையின் வலது
பக்கத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்தன. இடது பக்கம் கோரைப்புல் தரை அதில் சின்னதாக
ஒரு