திங்கள், 6 ஏப்ரல், 2015

இறுக்கம்

இரண்டுநாள் மழை ஓய்ந்த 
காலைப்பொழுதின் ஐந்தரை மணி
இருக்கைகள் நிறைந்திருந்த 
சென்னை நகரப் பேரூந்தில் 
"நினைப்பதெல்லாம்.... நடந்துவிட்டால்.....
தெய்வம்.. ஏதுமில்லை....."
என்ற பீபி.சீனிவாசின் குரலுக்கு 
 இறுக்கத்தை 
சுமந்தவர் முகத்தை 
குளிர்காற்று தன்தொழில் மறந்து 
விலகிப்போனதும்
பாடல் வரிகளும் 
பார்...மகளே....பார்..
என மாறிப்போனது....

இன்னொரு மழைநாளின் 
காலைப்பொழுதின் ஐந்தரை மணி 
நெல்லை-தென்காசி பேரூந்தில் 
ஒலித்த 
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல் தோறும் வேதனை இருக்கும்"
என்ற பீபி.சீனிவாசின் குரலுக்கு 
முருகேசன் அண்ணாச்சி
உதிர்த்த சிரிப்பில் 
அவரின் இறுக்கமும் தணிந்திருக்கக்கூடும்...

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


யதார்த்த உண்மைகள்...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

உண்மையான வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்--

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

yathavan64@gmail.com சொன்னது…

அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு