செவ்வாய், 28 ஜனவரி, 2020

இது அத்திகாவாப்பா!!

தூக்கம் வருகிறதென்று சொன்ன ரத்திகா அருகில் வந்தாள்,

இது என்னதுப்பா
ஓவியம்

இது யாருப்பா
சும்மா ஒரு உருவம்

இது யாருப்பா இயலா
ஆமாண்டா!

அப்போ நான் எங்கப்பா
உன்னைய வரையட்டுமா, இப்பிடி- உக்காரு

கொய்யாபழஞ் சாப்ட்டு வாய கழிவிட்டு- வாரேன்ன
சரி வா

அப்பா வந்துட்டேன்
இந்த இருக்கைல உக்காரு

கட்டிலில் தூவலும் (பேனாவும்) தாள்களும் கொண்டு நானிருக்க, எதிரே இருக்கையில் அவள். நான்கு வயதைக் கடந்தவள் முதன்முறையாக என் கோடுகளுக்கு உயிர் கொடுக்க அமர்ந்தாள்.
இதோ சில நிமிடங்களில் அவள் போன்ற உருவத்தை வரைந்துவிட்டேன். பார்த்தவள், புன்னகைத்துவிட்டு செல்பேசி கேட்டாள்.

உச்சரிப்பில் இன்னும் "ர" சரியாக வராத இளையவள் இயல் வந்தாள்!!

இது அத்திகாவாப்பா!!
ஆமாண்டா

கருத்துகள் இல்லை: