செவ்வாய், 11 மார்ச், 2014

வாழுங்கள் பல்லாண்டு


வாழுங்கள் வளமுடன் இதமாக பல்லாண்டு !

வாழ்த்த பலநண்பர் வருவர் பூக்கொண்டு !!

வானவில் நிற ஒற்றுமை உங்களுக்குண்டு !

வான் சிறப்பாம் வள்ளுவனின் மாரியுமுண்டு !!

வாடாமலர் சூடியநின் வாழ்வில்மாறா மணமுண்டு !

வாசமுடன் வீசும்தென்றல் தரிசனம் நிதமுண்டு !!

வாழுங்கள் வாழ்வை புது அர்த்தங்கொண்டு !

விண்ணும் மண்ணும் முத்தமிடும் நிகழ்வுண்டு !!

வயிறார அன்புடன் ஊட்டும் அன்னமுண்டு !

வாழ்வியல் அறத்தில் வள்ளுவன் துணைகொண்டு !!

வாழிய பல்லாண்டு ! வாழ்க்கை துணைகொண்டு !! !

                                                                             -------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: