செவ்வாய், 25 மார்ச், 2014

கூட்டுப் பெருச்சாளிகள் வருகிறது.....

கூட்டுப் பேச்சில்
கை நிறைய தேர்ந்ததினால்.
வாக்கு கேட்டு வருவான்.


வன்ம மது நெஞ்சி லிருக்கும்
புன் சிரிப்பு உதட்டி லிருக்கும்
பொன்னுருக பேசி வருவான்..

 

வாக்கு போடும் பாமரனே..
வார்த்தை கேட்டு
வாய் பிளவாதிரு !!

 

காவி கரையில்
வந்தி டுவான்..
கதர் உடையிலும்
வந்தி டுவான்..
தொப்பி யணிந்தும்
வந்தி டுவான்..

 

தானைத் தலைவ னென்பான்..
ஈழத் தாயென்பான்
வரலாற்றுப் பிழையுடனே
வாக்கு கேட்ட வந்திடுவான் ..

 

தமிழ் நலமே
தன் னலமென்பான்..
நாளை
தமிழ் நிலமே
தன் னிலமென்பான்..

 

திராவிடம்
தேசிய மென்பான்..
அணி சேர்ந்து நிற்ப்பான்..
அறிவின்றி பேசுவான்..

 

விழித்திரு
வாக்காளனே..
விதைகள் போடுவது
நீதானே..!! 

 

                                                                             -------ஜெ.பாண்டியன்

      

கருத்துகள் இல்லை: