செவ்வாய், 11 மார்ச், 2014

உண்மை காதலுக்காக !!


என் முன்னே
அமர்ந்தி ருப்பவளே
கேள் !

என் முன் கதைகளை
உன் முன்னே கூறுபோட
வரவில்லை ..
கூர்மையுடன் கொஞ்சம்
ஓர்மையுடனும்
கேள் !

என் பின் கதையின்
ஆத்மாவை குருவெளி யீடு
செய்ய
அவதானித் திருக்கிறேன் !!

நான்
கொண்ட நினைவுகளையும்
கண்ட கனவுகளையும்
இட்டுப் பரப்புவேன் உன் மடியிலே !
தொட்டுப் பார்ப்பேன் உன் இதயத்தையே !

உயிர் வலிக்க வலிக்க
இருதயம் துடி துடிக்க
காதலித்தது மில்லை
காதலியாலோ, காதலாலோ
கைவிடப் பட்டது மில்லை ..!

கட்டியணைக்க வேண்டாம்
கவிதை படித்துச் சொல் போதும் ..

வியர்வைக் காதல் கழுவும்
ஆற்றுநீர் மணம் வேண்டாம் ..

கிணற்றி லூரும் நன்னீர்
நற்பேறில்
காதல் நுகர்வோம்
களித்திருப்போம் !!!


                                                                             -------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: