திங்கள், 3 மார்ச், 2014

காதலுக்கு ஊடல் அழகு..!


கடலும் பொழுதும் வானும் அமைதிகாக்க
...கருமேகம் போர்வை போர்த்திஇருளை வசமாக்க
கண் பார்த்துதான் நானும் பேசுகிறேன்
......கருவிழி கொண்டு கடத்துகிறாய் என்னை
ஆதவனும் ஆர்பரித்து செங்கதிர் வீசமுனைகிறான்
.....அல்லியுன் ஒழுங்குதோற்ற மதை பார்த்தே ..
செங்கதிர் வண்டாய் தேன்கன்னம் மொய்ப்பதை
.....சினம் கொண்டே இனிமையாய் சிலாகித்தேன் .

                                                                           ------ஜெ.பாண்டியன்

கருத்துகள் இல்லை: