வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சில துளிகள்..


இறைவனை
நேசிக்க
நல்லநேரத்தை விட
விடுமுறை
நேரம்தான்
உகந்த தாகிப்போனது

----------------------------------------

கரு வண்ணத் தாளில்
மறைந்து போன வெள்ளை
எழுத்துகள் - மின்னல்


----------------------------------------

விழியும் ஒளியும்
மோதும் நேரம்
வரும் பொழுது
இரவாகிப் போனது....


---------------------------------------

தூக்கத்தை
தொலைத்த இரவுகள்..
பகலாக
இருப்பதில்லை...

---------------------------------------

நீ என்னுடன்
இருப்பதற்கே காரணம்
நானாக இருப்பின்..
வேறு காரணங்கள்
தேடி நான்
அலைய வேண்டுமா??

---------------------------------------

எண்ணம் கொண்டு
எழுத நினைத்தால்
யோசனை செய்யென
முகம் மூடுகிறது
எழுதுகோல்...!

--------------------------------------

இயல்பாய்
இம்சை தரும்
இனியவள்
இனிய
இரவுக் குறியவள்.
நித்திராதேவி....

--------------------------------------

இமைகளின்
இறுக்கம் தளர்த்து
இன்ன லற்ற
இனிய பொழுதில்
கனவுகளை
அணி சேர்த்து
பயணிப்போம்.

-------------------------------------

சிலேடை சத்தங்களில்
சில்லரை வாகனங்களுடே
சிக்கல் மனதுடன்
சில மணித்துளி பயணம்..

கருத்துகள் இல்லை: