செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு -2ம் கொஞ்சம் வாசிப்பும்

நேற்றைய தொடர்ச்சியாக இன்றைய பதினைந்து நிமிட கோட்டு வரைவுகள்.

முகத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாது என எண்ணிக் கொண்டேயிருந்தது மனது, முழு உருவம் வரைவதில் இன்னும் சிக்கல் இருக்கிறது.




இப்போது ஒரு எண்ணெய் வண்ண ஓவியமொன்றும் வரைந்து கொண்டிருக்கிறேன், அதன் முதல் கோட்டு வரைவும் நிறமும் சரவணன் அண்ணன் (ஆசான்) முடித்துவிட்டு, என்னிடம் அதன் அடுத்த அடுக்கினை வரையச் சொல்லி கொடுத்து மாதம் இரண்டிருக்கும், இன்னும் அப்படத்திலுள்ள தெப்பத்தின் தாமரைகளை வரைய வரைய மாற்றிக் கொண்டேயிருக்கிறேன் முடிந்தபாடில்லை, இந்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த ஓவிய அனுபவம் பற்றி கொஞ்சம் எழுத வேண்டும் என எண்ணமுள்ளது.


வாசிப்பு: போன வாரம் இறுதியில் தொடங்கிய புத்தகம் "கூவம் நதிக் கரையினிலே" பத்திரிக்கையாளர் அல்லது எழுத்தாளர் சோ எழுதியது, அரசியல் நையாண்டி இதுபோல் யாராலும் எழுத இயலுமா என்று தெரியவில்லை. தமிழக இந்திய கட்சிகளையும் திரைப்படம் உருவாகும் விதத்தையும் எள்ளி நகையாடியிருப்பது வாசிக்க வேடிக்கையாகவுள்ளது. துக்ளக் பத்திரிக்கை ரசிகர்களை படு பயங்கரமாக சிரிக்க வைத்திருப்பார் போலத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: