சனி, 29 அக்டோபர், 2016

பசியோடு கசியும் நாள்

2012-ல் மணி பன்னிரண்டிருக்கும் அப்பொழுதுதான் கண் விழித்தோம். அறைக்கு வெளியேயுள்ள கட்டைச்சுவரில் உட்கார்ந்தும் சாய்ந்தும் பேசிக்கொண்டிருந்தோம். மாமல்லபுரம் போவதாக சில நிமிடங்களில் முடிவெடுக்கும் முன்னே பசி குடலைத் தின்னத்தொடங்கியிருந்தது. காஃபி குடிக்கலாமென்று சென்று குடிக்காமல் திரும்பி வந்தோம். குளியல் முடித்து வெளியே கிளம்ப மணி இரண்டாகிவிட்டது.

தெருக்களில் வெடிமருந்து கிழித்த காகிதங்கள், அரசாங்கமே கடையடைப்பு நடத்தினாலும் இப்படி அடைக்கமாட்டார்கள். அங்கங்கே வேட்டு சத்தங்கள் ஒலிக்க. நாங்கள் அவரவர் அலைபேசியில் உறவுகளோடு பொய் பேசிக்கொண்டே நகர்ந்துகொண்டிருந்தோம். "பொய்யா அதுவென்ன பொய் சாப்பிட்டோம் கறிசாப்பாடுதான் சாப்பிட்டோம் என்ற தோரணையில்."

கானகம் கடந்து திருவான்மியூரில் ஒரு கடை கிடைத்தது. தக்காளி, எலுமிச்சை சாதம் ஊறுகாயோடு உண்டு கழித்து கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள நிறுத்தத்தில் பேருந்து ஏறினோம். மாமல்லபுரத்தில் மக்காச்சோளம் சாப்பிட்டுவிட்டு இரவு அறை திரும்பினோம் மதியத்தில் திறந்திருந்த கடையும் அடைபட்டிருந்தது. தண்ணீரை விழுங்கிவிட்டு கணினியில் படம் ஓட்டினோம்.  ஓலமிட்டுச் சிரித்தோம், கண்ணயர்ந்தோம்.

காலையில் கறியெடுக்கச்சென்றபோது குடலின் நினைவுகளிலிருந்து.

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்


யாழ்பாவாணன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்...